வயதுக்கு மீறிய இளமை, உலகறியா தியாகம் ம.வீரபாகு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்தமுழுநேர ஊழியரும், ‘விஜயபாரதம்’ வார இதழ் ஆசிரியருமான ம.வீரபாகு, கரோனாதொற்றால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71.

திருநெல்வேலியில் பிறந்த ம.வீரபாகு, கல்லூரிப்படிப்பை முடித்ததும் ஆர்எஸ்எஸ் முழுநேரஊழியரானார். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுவந்தார். 1975-ல்நெருக்கடி நிலையை எதிர்த்து இளைஞர்களை திரட்டி போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்துமுன்னணி, விஷ்வ இந்து பரிஷத்தில் மாநில அமைப்பாளராக பலஆண்டுகள் பணியாற்றினார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மக்கள் வழிபாட்டுக்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்ய மக்களை திரட்டி போராடி வெற்றிகண்டவர்.

கடந்த 10 ஆண்டுகளாக விஜயபாரதம் வாரஇதழின் ஆசிரியராக இருந்து, அதன் நிர்வாகத்தையும் கவனித்துவந்தார். அமைப்பு பணிகளில் தேர்ந்தவரான அவர், ஏராளமான ஆர்எஸ்எஸ் ஊழியர்களை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட வீரபாகு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அங்கு உடல்நிலை மோசமானதால், நேற்று அதிகாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றி நேற்று காலை 11.40 மணிக்கு உயிரிழந்தார். வில்லிவாக்கம் மயானத்தில் உடல்தகனம் செய்யப்பட்டது.

ம.வீரபாகு மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘‘அளப்பரிய ஆற்றல், வயதுக்கு மீறிய இளமை, உலகறியாதியாகம், திட்டமிடும் நேர்த்தி என்று சாதனை படைத்தவர் வீரபாகு” என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

One response to “வயதுக்கு மீறிய இளமை, உலகறியா தியாகம் ம.வீரபாகு”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...