வேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது

பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலியில் ஒவ்வொருமாத இறுதி ஞாயிற்று கிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றுவதுவழக்கம். இதன்படி பிரதமர் மோடி இன்று பேசும்பொழுது, சமீபத்திய வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதியசந்தர்ப்பங்களுக்கான கதவுகளை திறந்துள்ளன. பலஅரசியல் கட்சிகளால் உறுதி அளிக்கப்பட்ட விவசாயிகளின் தசாப்தகால பழமையான வேண்டுகோள்கள் தற்பொழுது தீர்க்கப்பட்டு உள்ளன.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறிய வேளாண்சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கான தடைகளை உடைத்தது மட்டுமின்றி, அவர்களுக்கான புதிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளையும் வழங்கிஉள்ளன.

இச்சட்டத்தின் கீழ், வேளாண் கொள்முதல் பொருட்களுக்கு 3 நாட்களுக்குள் விவசாயிகளிடம் பணம்வழங்க வேண்டியது கட்டாயம். பணம் சென்றுசேரவில்லை எனில் விவசாயி புகார் அளிக்கலாம்.

இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் ஒருமாதத்திற்குள் விவசாயியின் புகாரை பற்றி விசாரிக்கவேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக நடந்த ஒரு சம்பவம் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மராட்டியத்தின் துலே நகரில் ஜிதேந்திரா போய்ஜி என்ற விவசாயி இந்த புதியவேளாண் சட்டங்களை பயன்படுத்தி உள்ளார்.

அவர் மக்கா சோளம் பயிரிட்டு சரியானவிலைக்கு விற்க முடிவு செய்துள்ளார். மொத்தம் ரூ.3.32 லட்சம் அவருக்கு கொடுப்பது என ஒப்புதலானது. இதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் முன்பணம் கொடுக்கப்பட்டது.

15 நாட்களில் அவருக்கு மீதிதொகை கிடைக்கும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தொகையை பெறவில்லை. இதுபற்றி புகார் அளித்த ஒருசில நாட்களில் மீதிதொகை அவருக்கு வந்துசேர்ந்தது என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.