திரிணமுல் காங்கிரசிலிருந்து ஓடும் எம்.எல்.ஏ.,க்கள்

மே.வங்கத்தில் ஆளும்திரிணமுல் காங்கிரசிலிருந்து இரண்டுதலைவர்கள் விலகிய நிலையில், மற்றொரு எம்எல்ஏ., கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மே.வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி மற்றும் ஜிதேந்திர திவாரி ஆகியோர் விலகினர். தங்களது விலகலுக்கான கடிதத்தை, கட்சிதலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் வழங்கியுள்ளனர்.

இன்னும் சிலநாட்களில் அமித்ஷா மேற்கு வங்கத்திற்கு செல்ல உள்ளார். அப்போது, இருவரும் , அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. அதில் சுவேந்து அதிகாரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் . அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் 50 பேர் இவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என தெரிகிறது. மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் கடந்தமாதம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கட்சியில் இருந்தும் விலகினார். இன்னும் சில அதிருப்தியாளர்கள், ஆளுங்கட்சியில் இருந்துவிலகி பா.ஜ.,வில் இணையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ்கட்சி எம்எல்ஏ., ஷில்பத்ரா தத்தாவும் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், 2 நாளில் 3 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து விலகியது திரிணமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...