பாஜகவிடம் இருந்து ஒழுக்கம், பண்பை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும்

தமிழக பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

தேர்தல் பரப்புரையை அன்னை மீனாட்சி ஆசியோடு மதுரையில் தொடங்கி யுள்ளோம். பாஜகவிடம் இருந்து ஒழுக்கம், பண்பை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும். ஓட்டுக்காக இரட்டைவேஷம் போடுபவர் மு.க.ஸ்டாலின். தற்போது இந்துக்களுக்குப் பாதுகாவலர் என்று போலி வேஷம் போடுகிறார். நாம் வெற்றிவேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கியதுபோல், ஸ்டாலினையும் வேலை தூக்க வைத்தது நமக்கு கிடைத்தவெற்றி. திமுக தமிழுக்கும், தமிழருக்கும் விரோதமானது.

ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு உட்பட பல்வேறு திட்டங்களில் காங்கிரஸ், திமுக கூட்டணிசேர்ந்து கையெழுத்திட்டனர். தற்போது அதை எதிர்த்து இரட்டைவேடம் போடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்தது திமுக, காங்கிரஸ். இலங்கையில் கொத்துகொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி.

ஊழல்செய்ய வேண்டும், கட்டப் பஞ்சாயத்து, கமிஷன் வாங்க வேண்டும், ஏழை மக்களின் நிலங்களை அபகரிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவினர் நினைக்கின்றனர். திமுகவை நிச்சயமாக தமிழக அரசியலைவிட்டு விரட்டும் நாள் மே மாதம் வரப்போகிறது.

வெற்றிவேல் யாத்திரை இரண்டு வெற்றியை பெற்றுத்தந்துள்ளது. ஒன்று மு.க.ஸ்டாலினை வேலை தூக்கவைத்தோம். அடுத்து தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை கொடுக்க வைத்ததாகும்.

சமூக நீதியை பாதுகாக்காத திமுகவுக்கு நாம் வரும் மே மாதத்தில் தக்கபாடம் புகட்ட வேண்டும். அதற்கு நமதுகரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...