திமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;

”திமுக., மீண்டும் ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது,” என, பிரதமர் மோடி, கோவை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

 

தொடர்ந்து, கோவை, பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: தமிழக சட்ட சபை தேர்தல்வாயிலாக, புதிய அரசை தேர்ந்தெடுக்க வேண்டியபொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.மத்தியில் பா.ஜ., அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க., அரசும், கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்துக்கு, நல்ல உதாரணமாக செயல்பட்டுவருகின்றன.தமிழகமக்கள் பயன் பெறுவதற்காக, இணைந்து, பணியாற்றி வருகிறோம். இதில், தமிழகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன.

நம் நாடு, இருவிதமான துருவ அரசியலைப் பார்க்கிறது. ஒன்று, ஊழலும் ஆதிக்கமும் நிறைந்த ஆட்சி. மற்றொன்று, தேசியஜனநாயக கூட்டணியால் நிகழ்த்தப்படும் கருணை அரசு.சுயநலம் மட்டுமே அவர்களின் அடையாளம், இலக்கு. தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து நடத்தும்திட்டங்கள், ஊழலுக்கான திட்டங்களாகவே உருவாக்கப்படுகின்றன.

ஊழல் செய்வதை பற்றியே, அவர்கள் மூளையைகசக்கி, யோசித்துக் கொண்டிருக்கின்றனர். ஊழல் செய்வதற்கான சிறந்தவழிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மட்டுமே, அவர்களுடைய கட்சிகளிலும், ஆட்சியிலும் முக்கியப் பதவிகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அப்போதெல்லாம் வன்முறைக்கு வழியை ஏற்படுத்தித் தருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், அப்பாவி மக்களை ஏமாற்றுவோரையும் கொடுமைப்படுத்து வோரையுமே கட்சியில் வைத்திருக்கின்றனர்.

தி.மு.க.,ஆட்சிக்குவந்தால் சட்டவிரோதிகள், தாங்களே ஆட்சிக்கு வந்ததாக நினைப்பர். அவர்கள் மீண்டும் தலைதுாக்குவர். இத்தகைய சூழ்நிலைகளால், தமிழகப் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இவர்கள் எப்படிநடத்தினர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை நான் நினைவுபடுத்த வேண்டியதில்லை. ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு, திமுக.,வும், காங்கிரசும் வெகுமதி அளித்துவந்தன.

தி.மு.க., தமிழர் நலனுக்கான கட்சி என்ற அந்தஸ்தையும், அடையாளத்தையும் எப்போதோ இழந்துவிட்டது. அந்தக் கட்சி முழுமையான பெரும்பான்மை பெற்று, கால் நுாற்றாண்டு காலமாகிவிட்டது. இப்போது தமிழகம் என்ற, ஒரு மாநிலத்துக்குள் இருக்கிற ஒருபிராந்தியக் கட்சியாகிவிட்டது. தி.மு.க.,வுக்குள்ளும், காங்கிரசுக்குள்ளும் ஏராளமான உள்முரண்பாடுகள் இருக்கின்றன. இரண்டு கட்சிகளும், குடும்ப அரசியலை வளர்க்கிறகட்சிகள். உள்விவகாரங்களில் சிக்கியுள்ள அந்தக் கட்சிகளால், ஒருநல்ல ஆட்சியை நிச்சயமாகத் தரமுடியாது. தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் இருந்த, கடுமையான மின்வெட்டை உங்களால் என்றைக்கும் மறக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...