IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது

அண்ணாமலை IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது.”வாக்குகேட்டு யார் வேண்டுமானாலும் வரலாம் – அப்படி வருபவர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் – வோட்டு போடும்போது உங்கள் எண்ணத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துங்கள்”- என்று மாநில அளவிலான ஜமாத் மற்ற ஜமாத்களுக்கு வழிகாட்டியுள்ளது!

இதுதான் சரியான விஷயம்! ஆனால் இந்தசரியான விஷயத்தை – “ஆமாம்! எவரும் வாக்குக்கேட்டு எந்தப் பகுதிக்கும் வருவதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு – அப்படி வருபவர்களை – அவர்களது கருத்துக்களை நாம் ஏற்காவிட்டாலும்கூட கண்ணியமாக நடத்த வேண்டும்! நம்முடைய எண்ணம் எதுவோ அதை வோட்டு போடும்போது வெளிப்படுத்த வேண்டும்!”…

இந்த அடிப்படையான விஷயத்தை…எல்லாருக்கும் பட்டவர்த்தனமாகப் புரியக்கூடிய எளிய உண்மையை ஆணித்தரமாகச் சொல்வதற்கே…ஒரு அண்ணாமலை தேவைப்படுகிறார்!அதிலும் அவர் ஆணி அறைந்தாற்போல – “பள்ளப்பட்டி இந்தியத் திருநாட்டுக்குள்தான் இருக்கிறது – இந்தியன் CONSTITUTION கீழேதான் வருகிறது”- என்று ஓங்கி அழுத்தமாகச் சொன்ன பிறகுதான்…
விஷயம் விபரீதமாக போவதை உணர்ந்து மாநில அளவிலான ஜமாத், உள்ளூர் “மூர்க்கவாதிகளை” (இது அண்ணாமலையின் வார்த்தை) திருத்த முன்வருகிறது!
ஆனால் இத்தனை அமர்க்களத்திலும் கருத்து சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற…காங்கிரசும், திமுகவும், கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு, இடதுசாரி, லிபரல் அறிவுசீவிகளும்…

வாயில் வாழைப்பழத்தை கெட்டியாக அடக்கிக்கொண்டு மௌனம் காத்தனர்!
அது எப்படி ஒரு சுதந்திரமான நாட்டில், எந்த ஒரு மதக்குழுவும் “இன்னின்னார் எங்கள் பகுதிக்கு வோட்டு கேட்டு வரக்கூடாது?”- என்று ஃபத்வா போட முடியும்?
ஒரு வேளை மௌனமாக ரசிக்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்?
பள்ளப்பட்டி ஜமாத் – அண்ணாமலை குறிப்பிட்டது போல – திமுகவின் கிளையோ?
காங்கிரஸ்காரனுக்கு இதுபற்றி எல்லாம் கருத்தே இல்லையோ? ஐயா நான் ஒருவேட்பாளர் – எந்தக் கட்சியும் சாராத சுயேச்சை வேட்பாளராக – எந்தவித ஆள்பலமும், அமைப்பு பலமும் இல்லாதவராகவே இருக்கலாம்! ஆனால் நான்போட்டியிடும் தொகுதியின் எல்லாபகுதி மக்களையும் சென்று சந்தித்து வோட்டு கேட்கும் உரிமை எனக்கு இல்லையா என்ன?.

இதுபற்றி எல்லாம் – பள்ளப்பட்டி ஜமாத்தாரின் செயல்களுக்கு – எந்த எதிர்வினையும் ஆற்றாமல்…வாய்மூடி மௌனம்காக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் – கேரளாவில் முஸ்லீம் லீக் உங்களுக்கு எதிரான காங்கிரஸ் (UDF) கூட்டணியில் இருக்கிறது. அங்கே மலப்புரம்மாவட்டம் புழுவதும் கம்யூனிஸ்டுகள் உள்ளேயே வரக்கூடாது என்று அங்குள்ள – பள்ளப்பட்டியைப் போல நூறு மடங்கு வலு உள்ள ஜமாத்கள் – தடைபோட்டால் உங்கள் கதி? அங்கே உடனே கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிப்பு வியாதி வந்துவிடும்!

மதச்சார்பின்மை தினவு எடுக்க ஆரம்பித்துவிடும்! காங்கிரஸ் காரனுக்கு சிறுபான்மையினர் அரிப்புவியாதி வந்துவிடும்!, காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் – தேசியக்கட்சிகள் என்ற முறையில் பள்ளப்பட்டி ஜமாத்விட்ட அறிக்கையைக் கண்டித்திருக்க வேண்டும்!.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...