சோனியாவிற்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதய நிதியை பற்றி மட்டுமே கவலை

காங்கிரஸ் ., தலைவர் சோனியாவிற்கு ராகுலை பற்றியும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உதய நிதியை பற்றியும் மட்டுமே கவலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: திருக்கோவிலூரானது விஷ்ணுவின் அவதாரமான கோயிலும், சிவன்கோயிலும் ஒருசேர அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த இடம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த திருக்கோவிலூர் மண்ணை கையெடுத்து கும்பிட்டுக்கொள்கிறேன். ஏப். 6-ந்தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களான அதிமுக, பா.ஜ., பாமக வேட்பாளர்கள் மகத்தான வெற்றிபெற்று சாதனை படைப்பார்கள்.

இந்த தேர்தலானது தே.ஜ., கூட்டணிக்கும் ஊழல் கூட்டணியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நடக்கும்போட்டி. நான் இந்தநேரத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சொல்லியாகவேண்டும். அவர் மக்களின் உண்மையான தலைவராக விளங்கியவர். ஏழைமக்களுக்காக பணியாற்றியவர்கள் என நாடுமுழுவதும் ஒருவருக்கு பெருமையை கொடுக்க வேண்டும் என்றால் அது எம்.ஜி.ஆரையே சேரும். அதன்பிறகு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வழியில் பின் தொடர்ந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றுள்ளார். ஜெயலலிதா, ஒருபெண்மணியாக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்.

தற்போது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தை வளர்ச்சிபாதையில் சிறப்பாக எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். நமக்கெல்லாம் திமுக, காங்கிரஸ் கூட்டணியை பற்றிதெரியும். லஞ்சம், ரவுடியிசம், நிலஅபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி இவற்றை மட்டுமே செய்து கொண்டிருக் கிறார்கள். சமீபத்தில் கூட திமுக.,வை சேர்ந்த ஆ.ராசா, காலம்சென்ற பழனிசாமியின் தாயாரை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று தரக்குறைவான வார்த்தைகளை திமுக.,வினர் பேசி வருகிறார்கள்.

பெண்கள், தாய்மார்களை பற்றி அவதூறுபரப்பி வரும் திமுக, காங்., கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் ஊழலை பற்றி பேசுகிறார். 2ஜி அலைக்கற்றை மூலமும், டிவியின் மூலமும் என்னென்ன ஊழல்செய்தீர்கள் என்று திரும்பிப்பாருங்கள். திமுக என்பது ஒரு அரசியல்கட்சி அல்ல, அது ஒருவியாபார நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சோனியாவிற்கு ராகுலைபற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டுமேகவலை. இவர்கள் தங்களது பிள்ளைகளை பற்றித்தான் கவலைப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் மோடிக்கு தமிழ்மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது.

உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் தமிழில் உள்ள திருக்குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசிவருகிறார். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டுவந்துள்ளார். சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் கூட சாலைமேம்பாட்டு பணிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்காக ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை வழித்தடங்களை செயல் படுத்தி வருகிறோம். மதுரை பகுதியின் விரிவாக்கத்திற்காக எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட நிறையதிட்டங்களை நாம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...