மருத்துவ வல்லுநர்களுக்கு டைம்ஸ் நவ் நிறுவனத்தின் மருத்துவ விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்

நாட்டின் பல்வேறு பகுதகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களுக்கு “டைம்ஸ் நவ்”  நிறுவனத்தின் மருத்தவ  விருதுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நேற்று  (29.06.2024) வழங்கினார். இந்தியாவில்  ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு “டைம்ஸ் நவ்” ஊடகக்குழுமம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் வயதினரிடையே நோய்த் தடுப்பு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.  நீரிழிவு நோய், இளம் வயதில் மாரடைப்பு, புற்று நோய்கள் போன்றவை அதிகரித்து வருவது சுகாதார சவால் மட்டுமின்றி, இளைஞர்ளின் சக்தியைக் குறைக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவது,  2047-ல் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை விரைந்து அடைய உதவும் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 போன்ற சவாலான காலங்களில், மருத்துவர்கள் செய்த தியாகங்களை இந்தியா அங்கீகரித்து கௌரவிக்கிறது என்றும், மருத்துவர்கள் தினம் என்பது நமது மருத்துவர்களின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கௌரவிக்கும் ஒரு சிறப்பு தினம் என்றும் அவர் கூறினார். நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் ல்வாழ்வை உறுதி செய்வதில் மருத்துவர்களின் முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், குணப்படுத்தும் மருத்துவத்தில் மட்டுமின்றி, நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பிலும்  உலகளாவிய முன்னணி நடாக இந்தியா மாறியுள்ளது என்றார்.

சுகாதாரப் பராமரிப்பு என்பது அலோபதி மருத்துவத்தோடு நின்றுவிடக் கூடாது என்றும் ஆயுஷ் மற்றும் பிற முறைளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மருத்துவர்களுக்கு சிறந்த பணி நிலைமை, தொடர்ச்சியான கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...