ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெசுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (04.07.2024) தொலைபேசி உரையாடல் நடத்தினார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியதுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விஷயங்கள் பற்றியும் உரையாடியதாக பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான ராணுவக் கூட்டாண்மையில் நாம் மகத்தான மதிப்பு வைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.
2023, நவம்பரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருவரும், ராணுவக் கூட்டாண்மையில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து உரையாடினார்கள். 2024-ல் வெளியிடப்பட்ட தங்களின் தேசியப் பாதுகாப்பு உத்திகள் குறித்த ஆவணத்தில் உயர்நிலைப் பாதுகாப்பு பங்குதாரராக இந்தியாவை ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு ராஜ்நாத் சிங்கிற்கு திரு ரிச்சர்ட் மார்லெஸ் வாழ்த்து தெரிவித்தார். டி-20 உலக சாம்பியனாக இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதற்கும், பாதுகாப்பு அமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
72
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |