ஹரிமடா கிராமத்தில் பிரம்ம குமாரிகளின் தெய்வீக தியான மையத்தை குடியரசுத்தலைவர் தொடங்கிவைத்தார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ள ஹரிடமடா கிராமத்தில் பிரம்ம குமாரிகளின் தெய்வீக தியான மையத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜூலை 8, 2024) திறந்து வைத்தார். பிரம்ம குமாரிகளின் ‘நிலைத்தன்மைக்கான வாழ்க்கை முறை’ என்ற தேசிய இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இயற்கை அன்னை அருள் நிறைந்தவள் என்று குறிப்பிட்டார். காடுகள், மலைகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள், மழை, காற்று ஆகிய அனைத்தும் உயிரினங்கள் வாழ இன்றியமையாதவை என்று அவர் கூறினார். இயற்கை மனிதர்களின் தேவைகளுக்கானதே அன்றி பேராசைக்காக அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மனிதர்கள் தங்கள் இன்பத்திற்காக இயற்கையை சுரண்டுகிறார்கள் என்றும், இதன் மூலம், இயற்கையின் கோபத்திற்கு ஆளாவதாகவும் அவர் கூறினார். இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும், இயற்கைக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வதும் காலத்தின் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

இயற்கையுடன் இணக்கமான வாழ்க்கை முறையை இந்தியக்கலாச்சாரம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது தத்துவத்தில் பூமியை தாய் என்றும், வானத்தை தந்தை என்றும் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். நீரை உயிர் என்பார்கள். மழையை இந்திரனாகவும், கடலை வருணனாகவும் வழிபடுகிறோம். நம் கதைகளில் மலைகளும் மரங்களும் நகர்கின்றன, விலங்குகள் கூட ஒன்றோடொன்று பேசுகின்றன. அதாவது, இயற்கை செயலற்றது அல்ல, அதற்குள் உணர்வின் சக்தியும் உள்ளது. இவையெல்லாம் இயற்கையைப் பாதுகாக்க இந்திய தத்துவ ஞானிகள் செய்த அழகான சிந்தனைகள் என்று அவர் விளக்கினார்.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், வானிலை குறித்த நிலையற்ற தன்மை ஆகியவை தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் என்று குடியரசுத் தலைவர் கூறினார். வெள்ளம், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், பூகம்பங்கள், காட்டுத் தீ, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் தற்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறி விட்டன என்று அவர் தெரிவித்தார்.

நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன என்று குடியரசுத்தலைவர் கூறினார். இயற்கை வளங்களின் குறைந்தபட்ச பயன்பாட்டை உறுதி செய்ய நமது பழக்கங்களை மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இயற்கைக்கு உகந்த வாழ்க்கை முறையைப் பற்றி விவாதித்தால் மட்டும் போதாது, அதை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இயற்கை வளங்களை பாதுகாக்க அனைவரும் அதனை பாதுகாக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...