நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் நலனுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- அஸ்வினி வைஷ்ணவ்

நாட்டில் கடந்த  பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) ரயில்வே குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். கடந்த பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநர்கள் ஒரு பயணத்தை முடித்ததும், அவர்கள் தலைமையகத்திற்கு வெளியே இருந்தால் ஓய்வெடுக்க சிறப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே ஓய்வு அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. தற்போது இந்த அறைகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து 558 ஓய்வு அறைகளும் இப்போது குளிரூட்டப்பட்டுள்ளன.

பல ஓய்வு அறைகளில், பாதத்திற்கான தசைப்பயிற்சி  வழங்கப்படுகிறது. ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.

ரயில் ஓட்டுநர்கள் என்ஜின்களை இயக்குகிறார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓட்டுநர் அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. 2014-ம் ஆண்டுக்கு பின்பு ரயில்களில் ஓட்டுநர் அறைகள் சிறந்த இருக்கைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 7,000-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்அறைகள் குளிரூட்டப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் அறைகளுடன் தற்போது புதிய என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.

ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. பயணங்களுக்குப் பிறகு ஓய்வு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சராசரி பணி நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்தது.

கடந்த சில ஆண்டுகளில், ரயில்வே ஆட்சேர்ப்பு அதிகரிக்கப்பட்டு, 34,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18,000 ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது.

போலி தகவல்கள் மூலம் ரயில்வே குடும்பத்திற்கு  அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடையும். ஒட்டுமொத்த ரயில்வே குழுவும் நாட்டுக்கு சேவை செய்வதில் இணைந்து செயல்படுகிறது.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...