என்கவுண்டரின் காரணம் என்ன? L .முருகன் கேள்வி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு போயுள்ளதையே காட்டுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், போலீசாரும், மாநில அரசு நிர்வாகமும் சேர்ந்து ஏதோ ஒன்றை மறைக்க முயல்கின்றனர். காரணம், படுகொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் ரவுடிகள் சிலர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, கைவிலங்கு மாட்டித்தான் அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனாலும், ஒரு ரவுடியை சுட்டுக் கொன்றுள்ளனர்.

எந்த ஒரு காரணத்திற்காகவும், போலீசார் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. குற்ற சம்பவத்தை விசாரித்து நீதி வழங்க சட்டம், நீதிமன்றம் உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் ரவுடி திருவேங்கடம் கையில் விலங்கு போட்டிருந்தால், அவர் எப்படி போலீசாரை நோக்கி சுட்டிருக்கவோ, தாக்கியிருக்கவோ முடியும்? ஏதோ ஒன்றை மறைக்கவே ரவுடி திருவேங்கடம் திட்டமிட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். அந்த விசாரணை நடந்தால் தான், இந்த படுகொலையின் மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும்.

எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...