பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள்- மோடி பேச்சு

‘பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையில் இந்தியா ஜி20யை முன்னெடுத்தது. உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் உள்ளது. உணவு, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது பெரிய சவால்களாக உள்ளன. பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன.

நட்பு நாடுகள்

பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடித்தாலும், கென்யாவில் வெள்ளம் ஏற்பட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி வருகிறது. இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு உதவுகிறது. உக்ரைன், ரஷ்யா போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், காசாவில் உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும் நாங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம்.

ஓற்றுமை

இந்தியா தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய தெற்கின் நாடுகள் ஒன்றுக்கொன்று துணை நிற்க வேண்டும், பொதுவான இலக்கை அடைய ஒற்றுமையாக இருக்க வேண்டும். உலக நிர்வாகத்தை சமாளிக்க கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகளால் தற்போதைய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...