மின்னணு வணிகத்தின் வளர்ச்சி மக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் -பியூஷ் கோயல்

மின்னணு வணிகத்தின் வளர்ச்சி குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலனில் மின்னணு வர்த்தகத்தின் நிகர தாக்கம்’ என்ற அறிக்கையை வெளியிட்டு பேசிய அமைச்சர், மின்னணு வர்த்தகத்தின் வளர்ச்சி, சமூகத்தின் பெரும் பிரிவினரிடையே பயன்கள் பகிர்ந்தளிப்பதை ஜனநாயகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

தொழில்நுட்பம் என்பது அதிகாரமளித்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறை என்று திரு கோயல் கூறினார். ஆனால் இந்த வளர்ச்சி ஒரு ஒழுங்கான முறையில் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், சந்தைப் பங்கிற்கான போட்டியில், நாடு முழுவதும் உள்ள 100 மில்லியன் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று கூறினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், இன்னும் உறுதியான நடவடிக்கை தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் திரு கோயல் அடிக்கோடிட்டுக் காட்டினார். “எங்கள் உதவிக்கு இன்னும் தகுதியான ஒரு பெரிய பிரிவு அங்கே உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்திற்கான வேலைகள் மற்றும் வாய்ப்புகள் என்று வரும்போது, நாம் அனைவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், “என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பாரம்பரிய சில்லறை விற்பனைத் துறையில் மின்னணு வணிகத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும், வேலைவாய்ப்பில் அதன் தாக்கம் குறித்தும் திரு கோயல் கவலை தெரிவித்தார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சந்தையின் பாதி மின்னணு-வணிக கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் எடுத்துரைத்தார், இது “கவலைக்குரிய விஷயம்” என்று அவர் விவரித்தார்.

மின்னணு வர்த்தகத்தின் பரந்த தாக்கங்களை பிரதிபலிக்கும் வகையில், அதன் தாக்கம் குறித்து நடுநிலையான மற்றும் தரவு அடிப்படையிலான பகுப்பாய்வை திரு கோயல் வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய திரு கோயல், மின்னணு வணிகத்தின் வளர்ச்சி காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பாரம்பரிய கடைகள் வீழ்ச்சியடைந்து வருவதைக் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்து மின்னணு வணிக விஷயத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் மின்னணு வணிகத்தை விட்டுவிட விரும்பவில்லை. ஆனால் அதன் பங்கு குறித்து நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் சிந்திக்க வேண்டும்” என்று திரு கோயல் வலியுறுத்தினார்.

உள்ளூர் வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், குறிப்பாக மருந்தகங்கள் மற்றும் மொபைல் போன் பழுதுபார்க்கும் கடைகள் போன்ற துறைகளில் மின்னணு வணிகத்தின் தாக்கம் குறித்து அமைச்சர் தமது கவலையை வெளிப்படுத்தினார். தமது உரையை நிறைவு செய்த அவர், நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மின்னணு வணிகத்தின் தாக்கத்தை விரிவாகவும், விஞ்ஞான ரீதியாகவும் கவனமாக ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வர்த்தக சமூகத்தினரையும், நிபுணர்களையும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...