பார்க்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த புதிய ஸ்மார்ட் சென்சார் திட்டம்

பார்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த, குறைந்த செலவில், எளிதாக பயன்படுத்தத் தக்க, செல்பேசி அடிப்படையிலான புதிய ஸ்மார்ட் சென்சார் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சென்சார், உடலில் எல்-டோபாவின் அளவை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். இதன் மூலம் இந்த நோயை தீவிரமாக கட்டப்படுத்துவதற்கு தேவையான மருந்தின் அளவை தீர்மானிக்க முடியும்.

நமது உடலில் உள்ள நியூரான் செல்கள் தொடர்ந்து குறைவதால், டோபமைன் அளவு கணிசமாக குறைகிறது. இதனால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. எல்-டோபா எனும் வேதிப்பொருள் நமது உடலில் டோபமைனாக மாற்றப்பட்டு பார்கின்சன் நோய்க்கு எதிரான மருந்தாக செயல்படுகிறது.

டோபமைன் குறைபாட்டை ஈடு செய்ய இது உதவுகிறது. எல்-டோபா சரியான அளவில் நிர்வகிக்கப்படும் வரை நோயும் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும், பார்கின்சன் நோயின் அளவையும் நோயாளியின் வயதையும் பொருத்து நியூரான்களின் இழப்பை ஈடு செய்ய அதிகப்படியான எல்-டோபா தேவைப்படுகிறது.

இருப்பினும், மிக அதிகப்படியான எல்-டோபாவை பயன்படுத்துவது, இரப்பை அழற்சி, மனநோய், சித்தப்பிரமை, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளுக்கு காரணமாகிறது. எல்-டோபா அளவு மிகவும் குறைவது, பார்கின்சன் நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

சிகிச்சையில் எல்-டோபா அளவின் முக்கியத்துவம் கருதி, எளிதாக, குறைந்த செலவில் அதனை கண்காணிக்கும் முறை கண்டறியப்படுவது அவசியமானது. இதையடுத்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நவீன அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் அண்மையில் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் முறை ஒன்றை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...