பிரதமரின் மீதான எனது அன்பு அசைக்கமுடியாது ஜனசக்தி கட்சித்தலைவர் பேச்சு

”நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது” என லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.

பீஹாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, ஐந்திலும் வென்றது. சிராக் பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. வக்பு வாரிய சட்டத்திருத்தம், உயர் பதவிகளில் லேட்டரல் என்ட்ரி முறை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கூட்டணிக்குள் இருந்தாலும் விமர்சித்து வந்தார். இதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவார் என பல்வேறு யூகங்கள் கிளம்பின.

இது பற்றி சிராக் பஸ்வான் கூறியதாவது: நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. எனது கருத்துக்கள் எப்போதும் அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. வக்பு வாரிய மசோதாவை பார்லி., கூட்டு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. எங்கள் கட்சி பீஹார் மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ., உடன் கூட்டணியில் உள்ளது. எனவே, தேசிய அளவிலும், மாநிலத்திலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைபிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...