ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க சதி வெற்றிகரமாக முறியடிக்கும் இந்திய ராணுவம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச்சேர்ந்த நபர்களுக்காக ஆயுதங்களை கடத்திச் சென்ற நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறஇருக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பூச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களின் கையாளாக செயல்பட்டு வந்த நபரை பாதுகாப்பு படைவீரர்கள் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 3 கையெறி குண்டுகள் உள்பட வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் முகமது ஷபீர் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அஷிம் கான் என்பவருக்காக சூரன்கோட்டில்இருந்து ஆயுதங்களை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது.

ஏற்கனவே, குப்வாரா மாவட்டம், கெரான் செக்டாரில் உள்ளவனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை முறியடித்து, பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர். மேலும், கடந்தஜூலை மாதம்கத்துவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்-இ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்திருந்தனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதசெயல்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து முறியடித்து வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...