ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு

” ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜம்முவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலைவாய்ப்பில் பாகுபாடு ஆகியன தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. இனியும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அமைதி, குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் ஆகியவற்றை விரும்புகின்றனர். இதற்காக பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர்.

கடந்த இரு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் மக்களின் மனநிலையை காட்டுகின்றன. அதில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை ஒரு போதும் காங்கிரஸ் மதித்தது கிடையாது. அக்கட்சி தான், ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்திற்காக ராணுவ வீரர்களை நான்கு தசாப்தங்களாக காக்க வைத்தது. இத்திட்டத்தால், அரசு கருவூலம் காலியாகும் என ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது. ஆனால், நான் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனை விட அரசு கருவூலத்தை நான் பெரிதாக பார்க்கவில்லை.

குண்டு சத்தம் கேட்ட போது எல்லாம் காங்கிரஸ் வெள்ளை கொடி காட்டியதை மறக்கக்கூடாது. துப்பாக்கிகளுக்கு குண்டுகள் மூலம் பா.ஜ., ஆட்சியில் பதிலடி கொடுக்கப்பட்ட போது தான், எதிர்புறத்தில் இருந்தவர்களுக்கு உணர்வு வந்தது. 2016 ம் ஆண்டு செப்.,28 அன்று தான் இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...