காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி

பிரதமர் மோடியை தோற்கடிக்கும் வரை சாக மாட்டேன் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீரென மயங்கி விழுந்தார். பின்னர், கட்சியினரின் உதவியுடன் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய அவர் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசினார். மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை சாக மாட்டேன் என்றும், மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று சூளுரைத்தார்.

இதைத்தொடர்ந்து, அரசியல் வேறுபாடுகளையும், தன்னை விமர்சித்ததையும் மறந்து, கார்கேவை பிரதமர் மோடிதொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல்நலம் குறித்து விசாரித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது.

இந்த நிலையில், கார்கேவின் இந்தப் பேச்சுக்கு மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடந்து கொண்ட விதம் அவரதுகட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிருப்தியடைந்துள்ளது.அவரது உடல்நலம் குறித்த விஷயத்தில் தேவையில்லாமல் பிரதமரை இழுத்து பேசியுள்ளார்.

இதன்மூலம் பிரதமர் மோடியின் மீது காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கும்வெறுப்பு மற்றும் பயம் தெரிகிறது. பிரதமரை அவர்கள் தொடர்ந்து நினைத்து கொண்டிருக்கிறார்கள். கார்கே நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ, பிரதமர் மோடியும், நானும், நம்கட்சியினரும் பிரார்த்திக்கிறோம். பல்லாண்டு காலம் அவர் வாழ வேண்டும். 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அவர் பார்க்க வேண்டும், எனக்குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...