சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி

“யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், அதை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுங்க,” என, மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

துாய்மை இந்தியா திட்டத்தையொட்டி மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நம் மக்கள் மிகவும் புத்திசாலிகள். வெளிநாடுகளில் இருக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால், அதன் கவரை பாக்கெட்டில் வைத்து, பிறகு குப்பைத் தொட்டியில் போடுவர். ஆனால், இங்கிருக்கும்போது சாலையிலேயே போடுகின்றனர்.

நானும் ஏற்கனவே அப்படித்தான், காரில் போகும்போது சாக்லேட் கவர்களை சாலைகளில் போட்டு வந்தேன். தற்போது, சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வீட்டிற்குச் சென்று குப்பைத் தொட்டிகளில் போடுகிறேன்.

சாலைகள் உட்பட அனைத்து பகுதிகளையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், உடனே அதை படம் எடுத்து பத்திரிகைகளில் போடுங்கள். அதை மற்றவர்கள் பார்க்கும்போது அவமானமாக உணர்வதுடன், நாமும் இதுபோல் செய்யக்கூடாது என்பதை உணருவர். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...