சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி

“யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், அதை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுங்க,” என, மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

துாய்மை இந்தியா திட்டத்தையொட்டி மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நம் மக்கள் மிகவும் புத்திசாலிகள். வெளிநாடுகளில் இருக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால், அதன் கவரை பாக்கெட்டில் வைத்து, பிறகு குப்பைத் தொட்டியில் போடுவர். ஆனால், இங்கிருக்கும்போது சாலையிலேயே போடுகின்றனர்.

நானும் ஏற்கனவே அப்படித்தான், காரில் போகும்போது சாக்லேட் கவர்களை சாலைகளில் போட்டு வந்தேன். தற்போது, சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வீட்டிற்குச் சென்று குப்பைத் தொட்டிகளில் போடுகிறேன்.

சாலைகள் உட்பட அனைத்து பகுதிகளையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், உடனே அதை படம் எடுத்து பத்திரிகைகளில் போடுங்கள். அதை மற்றவர்கள் பார்க்கும்போது அவமானமாக உணர்வதுடன், நாமும் இதுபோல் செய்யக்கூடாது என்பதை உணருவர். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...