சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி

“யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், அதை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுங்க,” என, மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

துாய்மை இந்தியா திட்டத்தையொட்டி மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நம் மக்கள் மிகவும் புத்திசாலிகள். வெளிநாடுகளில் இருக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால், அதன் கவரை பாக்கெட்டில் வைத்து, பிறகு குப்பைத் தொட்டியில் போடுவர். ஆனால், இங்கிருக்கும்போது சாலையிலேயே போடுகின்றனர்.

நானும் ஏற்கனவே அப்படித்தான், காரில் போகும்போது சாக்லேட் கவர்களை சாலைகளில் போட்டு வந்தேன். தற்போது, சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வீட்டிற்குச் சென்று குப்பைத் தொட்டிகளில் போடுகிறேன்.

சாலைகள் உட்பட அனைத்து பகுதிகளையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், உடனே அதை படம் எடுத்து பத்திரிகைகளில் போடுங்கள். அதை மற்றவர்கள் பார்க்கும்போது அவமானமாக உணர்வதுடன், நாமும் இதுபோல் செய்யக்கூடாது என்பதை உணருவர். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...