இன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்

ஒரு காலத்தில் பயங்கரவாதம் இந்தியமக்களை பாதுகாப்பற்றதாக உணரவைத்தது, ஆனால் இன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவன மாநாடு ஒன்றில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபிறகு நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த உற்சாகத்தை நாளிதழ்கள் பதிவுசெய்துள்ளன. அவற்றை நான் பார்த்தபோது, காஷ்மீர் எப்படி வன்முறையால் சூழப்பட்டிருக்கிறது என்பதையும், முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகள் எப்படி இருந்தன என்பதையும் அந்தநேரத்தில் நான் உணர்ந்தேன்.

மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தபோது, பயங்கரவாதம் இந்திய மக்களை பாதுகாப்பற்றதாக உணரவைத்தது. ஆனால், தற்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. இப்போது பயங்கரவாதிகள் தங்கள்வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்.

எங்கள் அரசாங்கம் தெளிவானநோக்கத்தை நிர்ணயித்துள்ளது. நாங்கள் வாக்கு வங்கி அரசியலில் இருந்துவிலகி, மக்களுக்காக, மக்களால் முன்னேற்றம் என்ற மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவை வளர்ந்தநாடாக மாற்றுவதையே எனது அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியமக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். சமூக ஊடகங்களின் இந்தகாலகட்டத்தில் தவறான தகவல்கள் அதிகம் உள்ளன. அதேநேரத்தில் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு, ரிஸ்க் எடுப்பதற்குத் தேவையான ஆற்றலை மக்களிடம் அரசுகள் புகுத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் இளைஞர்களின் ரிஸ்க் எடுக்கும்திறன் வலுப்பட்டுள்ளது. நாட்டில் இப்போது 1.25 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இளைஞர்கள் தேசத்தை பெருமைப்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள்.

நம் நாட்டில், நாங்கள் கழிப்பறைகள் கட்டும்பணியை மேற்கொண்டோம். இந்த திட்டம் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இது சுகாதாரத்தை மேம்படுத்த உதவியதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரத்தை உயர்த்தவும் வேலைகளை உருவாக்கவும் உதவியது. எல்பிஜி எரிவாயு பலரின்கனவாக இருந்த காலம் ஒன்று இருந்தது. இந்த பிரச்சினையை அரசாங்கம் விவாதித்தது. எங்கள் அரசாங்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்தது. 2014 இல் 14 கோடி எரிவாயு இணைப்புகள் இருந்தன. இன்று, 30 கோடி இணைப்புகள் உள்ளன. இப்போது, ​​எரிவாயு தட்டுப்பாடு பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறும் போது, ​​இந்தநாடு சிதைந்துவிடும் என்று கூறப்பட்டது. அவசரநிலை ஏற்பட்டபோது, ​​இனிமேல் அவசரநிலை எப்போதும் இருக்கும் என்று சிலர்கருதினர். சிலதனிநபர்களும், சில நிறுவனங்களும் அவசரநிலையை விதித்தவர்களிடம் தஞ்சம்புகுந்தனர். ஆனால், அப்போதும் இந்திய குடிமக்கள் எழுந்து நின்றனர். கரோனாவின் இக்கட்டான காலம் வந்தபோது ​​இந்தியா தங்களுக்கு சுமையாகமாறும் என்று உலகமே நினைத்தது. ஆனால் இந்திய குடிமக்கள் கரோனாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

இன்று இந்தியா சென்று கொண்டிருக்கும் வளர்ச்சிப் பாதையைப்புரிந்து கொள்ள, நமது அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பார்ப்பதுஅவசியம். இந்த அணுகுமுறை – மக்களுக்காகப் பெரிதாகச் செலவழிக்கிறது, மக்களுக்காக பெரிதாக சேமிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் இவ்வளவுபெரிய மாற்றம் ஏற்படும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இந்தியாவின்வெற்றி, பெரிய அளவில் கனவுகாணவும் அதை நிறைவேற்றவும் நம்மைத் தூண்டியது. இன்று இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்ற நம்பிக்கை, எண்ணம் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...