பின்தங்கிய பிரிவில் உள்ள மக்களை முன்னுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் பாஜக செயல் படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி. நட்டா தெரிவித்தார்.
மேலும் பழங்குடி மக்களுக்கான நிதியை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் தன்பாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டு பிரசாரம் செய்தார்.
அப்போது மேடையில் அவர் பேசியதாவது,
”ஜார்க்கண்ட் மாநில முன்னேற்றத்துக்காக ஐக்கியமுற்போக்கு கூட்டணி ரூ. 80,000 கோடியை ஒதுக்கியது. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ரூ. 3,00,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத், முத்ரா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேவைக்கு எப்போதுமே முதல்இடம் கொடுக்கிறார் மோடி.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகே மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது. ராகுல் காந்தியிடம் ஒன்றைக்கேட்க விரும்புகிறேன். ஓபிசி பிரிவில் எத்தனைபேர் ராஜீவ்காந்தி அறக்கட்டளையில் உள்ளனர்.
காங்கிரஸ் செயற்குழுவில் ஓபிசி பிரிவினர் எத்தனைபேர் உள்ளனர்? ஆனால், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் 27 பேர் ஓபிசி பிரிவைச்சேர்ந்தவர்கள்.
பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் உழைக்கிறது எங்கள் ஆட்சி. பழங்குடி மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 3 மடங்கு அதிகரித்துள்ளார் பிரதமர் மோடி” எனக் குறிப்பிட்டார்
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |