ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி இருப்பதே அரசின் நோக்கம்

ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகியிருப்பதே பா.ஜ., அரசின் நோக்கம். மக்களின் முன்னேற்றம், மக்களால், மக்களுக்கான முன்னேற்றம் என்பதே புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான தாரக மந்திரம்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டில்லியில், ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் சார்பில், ‘தலைமைத்துவ உச்சி மாநாடு – 2024’ நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், 100 ஆண்டுகளைக் கொண்டாடும் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். மேலும் நாளிதழ் சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

உலகம் முழுதும் நிச்சயமற்ற, உறுதியற்ற தன்மை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. இந்த சூழலில், நம் நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக, என் அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். காங்., ஆட்சிக் காலத்தில், அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அரசு நடத்தப்பட்டது. ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த வகை அரசியலால், நாட்டில் சமச்சீரற்ற, சமத்துவமின்மை அதிகரித்தது. இது, அரசு மீதான மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டது. இந்த நம்பிக்கையை தற்போது நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகியிருப்பதே பா.ஜ., அரசின் நோக்கம்மக்களின் முன்னேற்றம், மக்களால், மக்களுக்கான முன்னேற்றம் என்பதே புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான தாரக மந்திரம். இதை அடிப்படையாக வைத்து, நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பணியாற்றி வருகிறோம்.

மத்திய அரசு, முதலீட்டின் வாயிலாக தனித்துவமான வேலைவாய்ப்பையும், வளர்ச்சியின் வாயிலாக கவுரவத்தையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. பா.ஜ., அரசின் அணுகுமுறை, மக்களுக்காக பெரியளவில் சேமிப்பதும், செலவு செய்வதும் ஆகும்.

அண்டை நாடுகளின் பயங்கரவாதத்தால், சொந்த வீடுகளிலும், நகரங்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்தோடு மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறி விட்டது. சொந்த இடத்திலேயே பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உணரவில்லை. இந்த நுாற்றாண்டு இந்தியாவின் நுாற்றாண்டாக இருக்கும். வளர்ச்சியின் வேகத்தை நம் நாடு தக்கவைத்துக் கொள்ளும். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...