சாதனை படைத்துள்ள வய் வந்தனா சுகாதார அட்டைகள்

தன்வந்திரி ஜெயந்தி மற்றும் ஆயுர்வேத தினத்தையொட்டி (29.10.2024), புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை தொடங்கி வைத்து இருந்தார்.   சுகாதார சேவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கும் விதமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்தார். இத்தகைய மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய் வந்தனா சுகாதார அட்டைகள் வழங்கப்படுவதுடன், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ், விரிவான சுகாதார சேவைகளைப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

2024 அக்டோபர் 29 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 3 வாரங்களுக்கு உள்ளாகவே, ஆயுஷ்மான் வய் வந்தனா சுகாதார அட்டைகள் பெறுவதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம்  4,880 மூத்த குடிமக்கள் இலவச சிகிச்சை பெற்றிருப்பதோடு, இதற்காக ரூ.9.42 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதுவரை வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்திலும் பலன் பெறாத 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தில், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமலேயே சிகிச்சைப் பெறலாம். ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதா அல்லது மத்திய அரசு சுகாதார சேவை போன்ற வேறு அரசுத் திட்டங்களின் கீழ் பலன் பெறுவதா என்பதை பயனாளிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.

பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தில், மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம். மருத்துவமனை சேர்க்கைக்கு முந்தைய செலவுகளும் இதில் அடங்கும். மருந்துகள், தீவிர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அல்லாத சேவைகள், ஆய்வகப் பரிசோதனைகள், செயற்கை உறுப்புகள் பொருத்துதல், தங்குமிடம் மற்றும் உணவு, தவறான சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புகள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் 15 நாட்களுக்கான தொடர் சிகிச்சையைப் பெறும் வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...