5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை மோடி சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு சென்ற நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மட்டும், 31 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி உள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவுக்கு, பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி சென்றார். அதன்பின் 18 – 19ல், தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த ஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
பிரேசிலில் இருந்து தென் அமெரிக்க நாடான கயானாவுக்கு கடந்த 19ம் தேதி சென்ற நிலையில், நேற்று நாடு திரும்பினார்.

ஐந்து நாள் அரசு முறை பயணத்தில், 31 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

அதன்பின் பிரேசிலில் நடந்த ஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தோனேஷியா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், பிரிட்டன், சிலி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதுதவிர அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, எகிப்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதற்கிடையே அக்கூட்டத்தில், உலக வர்த்தக அமைப்பு, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

அதன்பின் கரீபிய நாடான கயானாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள டொமினிகா, பஹாமாஸ், டிரினிடாட் அண்டு டொபாகோ, சுரிநேம், பார்படோஸ், ஆன்டிகுவா, செயின்ட் லுாசியா உள்ளிட்ட தீவு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...