இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம்

” இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், ” என பிரதமர் மோடி கூறினார்.

டில்லியில் சர்வதேச கூட்டுறவு மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதே கூட்டுறவு ஒத்துழைப்புக்கான மாநாடு இந்தியாவில் முதல்முறை துவங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், நமது கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம்.

இம்மாநாட்டின் மூலம் இந்தியாவின் எதிர்கால கூட்டுறவுப் பயணத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனுபவம் மூலம், சர்வதேச கூட்டுறவு மாநாட்டிற்கு 21ம் நூற்றாண்டிற்கான கருவிகளையும், புதிய உணர்வையும் பெறும்.

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் விரிவடைந்து வருகிறது. உலகை பொறுத்த வரை கூட்டுறவு என்பது ஒரு மாதிரி. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அது கலாசாரத்தின் அடிப்படை. அது வாழ்க்கை முறையில் ஒரு அங்கம். இந்தியாவில் எட்டு லட்சம் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன.

அவற்றில் 98 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் உள்ளன. கூட்டுறவு அமைப்புகளுடன் 30 கோடி பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். கூட்டுறவு என்பது சர்வதேச ஒத்துழைப்பிற்கு முக்கியமாக உலகின் தெற்கு பகுதிக்கு புதிய ஆற்றலை கொடுக்கும் என இந்தியா நம்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...