கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு

கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐ.சி.ஏ., எனப்படும், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவை பொறுத்தவரை கூட்டுறவு என்பது அடிப்படை கலாசாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் உள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. கூட்டுறவு தொடர்பான ஒட்டுமொத்த சூழல், கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, தனியாக கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. வீட்டுவசதித் துறை மற்றும் வங்கிப் பிரிவிலும் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாட்டில், இரண்டு லட்சம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு வங்கித்துறையை வலுப்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு நிறுவனங்களுக்கு உலகளவில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. கூட்டுறவு இயக்கத்தை சுழற்சி பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டும். இத்துறையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில், 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு லட்சம் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை கிராமங்களில் அமைக்க அரசு உறுதி ஏற்றுள்ளது.

கூட்டுறவு அமைப்புகளில், 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். இதன் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் பங்கு பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், நம் அண்டை நாடான பூடான் பிரதமர் தாஷோ டிஷெரிங் டோப்கே, பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜியின் துணை பிரதமர் மனோவா காமிகாமிகா, மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...