குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி நாளை (27  நவம்பர் 2024) புதுதில்லியில் உள்ள  விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் “பால் விவாகம் முக்த் பாரத்” என்ற தேசிய இயக்கத்தை தொடங்கிவைக்கிறார்.  இவ்விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர்  பங்கேற்கிறார்

2015-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட முன்னோடித் திட்டமான ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் வெற்றியானது  பெண் குழந்தைகள் மீதான அணுகுமுறை மற்றும் நடத்தைகளில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த வெற்றியின் உந்துதலாலா தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் குழந்தை திருமணத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் கவனம் செலுத்தும்.  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க பெண்களிடையே திறன், மேம்பாடு, தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான  நடைவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், அனைத்து நிலைகளிலும் பெண் குழந்தைகளின்  முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மனித உரிமை மீறல்களின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றான குழந்தை திருமணத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது கவலைக்குரிய  விஷயமாகும்.

குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...