மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால முதலமைச்சர்ஏக்நாத் ஷண்டே தெரிவித்துள்ளார் . மகாராஷ்டிராவில்மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் முதலமைச்சராக யார் பதவி ஏற்பார்கள்என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சர்ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்துகின்றனர்.ஆனால், பாஜக தரப்பில் தேவேந்திரபட்நாவிஸைமுதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமது இல்லத்தில்செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று போனில் பேசினேன். நான் ஒரு தடையாக இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளேன். மகாயுதி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் (பிரதமர்) முடிவு எடுங்கள். அதுவே எங்களுக்கு இறுதியான முடிவாகஇருக்கும். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மகாயுதிஅரசு மேற்கொண்ட பணிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே நான் திருப்தியாக உள்ளேன்.

நான் ஒரு பொதுவான மனிதன். எனவே பொதுமான மனிதர்களை சந்திக்கும்போது அங்கு தடை ஏதும் இருக்காது. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், பொதுமக்களின் பாதிப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளேன். நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியாகும். நாங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஓய்வின்றி உழைத்தோம். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை மகாராஷ்டிரா மக்களுக்காக உழைப்பேன். இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். மகாயுதி கூட்டணி தலைவர்கள் புதுடெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார். ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு வெளிப்படையாக கூறியதன் அடிப்படையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வில் சிக்கல் இருக்காது என்று பாஜக மேலிடம் கருதுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...