மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால முதலமைச்சர்ஏக்நாத் ஷண்டே தெரிவித்துள்ளார் . மகாராஷ்டிராவில்மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் முதலமைச்சராக யார் பதவி ஏற்பார்கள்என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சர்ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்துகின்றனர்.ஆனால், பாஜக தரப்பில் தேவேந்திரபட்நாவிஸைமுதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமது இல்லத்தில்செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று போனில் பேசினேன். நான் ஒரு தடையாக இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளேன். மகாயுதி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் (பிரதமர்) முடிவு எடுங்கள். அதுவே எங்களுக்கு இறுதியான முடிவாகஇருக்கும். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மகாயுதிஅரசு மேற்கொண்ட பணிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே நான் திருப்தியாக உள்ளேன்.

நான் ஒரு பொதுவான மனிதன். எனவே பொதுமான மனிதர்களை சந்திக்கும்போது அங்கு தடை ஏதும் இருக்காது. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், பொதுமக்களின் பாதிப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளேன். நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியாகும். நாங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஓய்வின்றி உழைத்தோம். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை மகாராஷ்டிரா மக்களுக்காக உழைப்பேன். இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். மகாயுதி கூட்டணி தலைவர்கள் புதுடெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார். ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு வெளிப்படையாக கூறியதன் அடிப்படையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வில் சிக்கல் இருக்காது என்று பாஜக மேலிடம் கருதுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...