இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின்

மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றார். அப்போது, ரஷ்ய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் இடையே புடின் பேசியதாவது:

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்கள் அதிகளவில் சந்தைபடுத்தப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின் பிரபல பிராண்டுகளுக்கு போட்டி போடும் வகையில் இந்த பொருட்கள் உள்ளன. இந்தியாவில், ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை, 2014ல் அறிமுகம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் பல முயற்சிகளால், இந்தியா உற்பத்தி மையமாக மாறி வருகிறது.

இதனால், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகளவில் நடக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது. அதனால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ரஷ்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்தியாவில் தங்களுடைய ஆலைகளை அமைக்க அவை தயாராக உள்ளன. விரைவில் இந்த முயற்சிகள் துவங்கும்.

தொழில்கள் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை, இந்திய பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...