ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் கேட்கவில்லை – முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ்

ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்’ என மஹா., முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவின் முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் நேற்று பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு இன்று (டிச.,06) அளித்த பேட்டி:

பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதை முதல் சந்திப்பிலேயே ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டார். சிவசேனா கட்சி தலைவர்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து முதல்வர் வர வேண்டும் என விரும்பினர். நாங்கள் பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதில் திட்டவட்டமாக இருந்தோம். தனிப்பட்ட முறையில் ஷிண்டேவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.

உள்துறை எப்பொழுதும் பா.ஜ., வசம் தான் இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டி உள்ளோம். பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்தனர். இலவச மின்சாரம், கல்வி போன்ற நல்ல திட்டங்களால் மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இது தான் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவானதற்கு காரணம். முழு மனதுடன் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...