அனைத்து துறைகளிலும் சீர்த்திருத்தம் பிரதமர் மோடி பெருமிதம்

“சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய தாரக மந்திரத்துடன் நம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம், அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்கிறது,” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

அதன்பின் அவர் பேசியதாவது:

நம் நாட்டின் வர்த்தக சூழல், சர்வதேச வர்த்தக வல்லுநர்களையும், முதலீட்டாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய தாரக மந்திரத்துடன் நம் நாடு கண்டுள்ள முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் பிரதிபலிக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியின் வாயிலாக அமைகிறது. ராஜஸ்தான் தன் வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும்போது, நம் நாடும் புதிய உச்சங்களை எட்டும்.

கடந்த 10 ஆண்டுகளில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளன. அன்னிய நேரடி முதலீடும், இருமடங்கு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் சார்ந்த நுாற்றாண்டு இது. ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தரவு ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியா, உலகிற்கு உணர்த்தியுள்ளது.

யு.பி.ஐ., போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன. எங்கள் அரசு, வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் மந்திரத்தில் செயல்படுகிறது. இதன் வாயிலாக, ராஜஸ்தான் பலன் அடைந்துள்ளது.

வரும் ஆண்டுகளில், உலகின் இளம்நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இந்தியா திகழும். நம் நாட்டின் பாரம்பரியத்தை இளைய சமுதாயத்தினர் முன்னெடுத்து செல்ல உதவுவர். இதை கருத்தில் வைத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், நம் நாட்டின் இளைஞர் சக்தி, புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறது.இது, தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த வளர்ச்சியின் வாயிலாக வெளிப்பட்டு வருகிறது. இன்றைய உலகில் ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...