பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தான் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் நேற்று பேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர் ராகுல், ‘அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பினரை சந்தித்து பேசினேன். அப்போது, பொதுத்துறை வங்கிகளை நிலை மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்,’ என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு இந்தியனும் எளிதாக கடன் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்த வங்கிகளை, தனியார் நிதி நிறுவனமாக்கி, பெரிய பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்குமானதாக மாற்றி விட்டார். நண்பர்களுக்கு அளவில்லாமல் பணத்தை வாரி வழங்குவதை பிரதமர் மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களிடம் இருந்து லாபம் பெறும் நோக்கில் பொதுத்துறை வங்கிகள் மாறி விட்டது. ஆள்பற்றாக்குறை மற்றும் நெருக்கடியான சூழல் ஆகியவற்றால், இலக்குகளை அடையாமல் திணறி வருகின்றன. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை, எனக் குறிப்பிட்டிருந்தார்.
ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியின் போது கண்மூடித்தனமாக கடன்களை வாரி வழங்கியதால், பொதுத்துறை வங்கிகள் சரிவை சந்தித்தன. ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து, தங்களின் கூட்டாளிகளுக்கு கடன் பெற்றுக் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.
கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக லோன் பெற்றவர்களின் எண்ணிக்கை 238 சதவீதமும், ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக லோன் பெற்றவர்களின் எண்ணிக்கை 300 சதவீதமும் அதிகரித்துள்ளது. உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கடின உழைப்பை ராகுல் அவமதிக்கிறார், எனக் கூறினார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |