மக்களுக்கு பொருளாதார பலம் அளிக்கும் கும்பமேளா மோடி பெருமிதம்

மகா கும்பமேளா நிகழ்வு சமூகத்தை வலுவூட்டுவது மட்டுமின்றி மக்களுக்கு பொருளாதர பலத்தையும் அளிக்கிறது. இது நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த முறை நடந்த கும்பமேளாவின் போது இங்கு புனித நீராடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இன்றைக்கு மறுபடியும் கங்கை தாயின் காலடியில் ஆசி பெறும் பாக்கியம் கிடைத்துள்ளது.

தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், அதை தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கவும் மகா கும்பமேளாவை நம் துறவிகள் நுாற்றாண்டு காலமாக பயன்படுத்தி வந்தனர். அன்றைய காலகட்டத்தில் கூட, சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக கும்பமேளா இருந்துள்ளது.

கடந்த கால ஆட்சிகளில் கும்பமேளாவுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. பக்தர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகினர். அதை அப்போதைய அரசும் கண்டுகொள்ளவில்லை. நம் கலாசாரத்துடன் அவர்கள் விலகி இருந்தே அதற்கு காரணம்.

ஆனால் இன்றைக்கு இந்திய கலாசாரத்தின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வைத்துள்ள அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ளன. எனவே தான் இந்த கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற பிரமாண்ட நிகழ்வுகளில் துப்புரவு பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த நிகழ்வில் 15,000 துப்புரவு பணியாளர்கள் இந்த நகரின் துாய்மைப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

துப்புரவு பணியாளர்களின் பாதங்களை, 2019ல் சுத்தம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. இந்த கும்பமேளா நிகழ்வு, சமூகத்தை வலுவூட்டுவது மட்டுமின்றி, மக்களுக்கு பொருளாதார பலத்தையும் அளிக்கிறது. இது நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...