அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தியது காங்கிரஸ் தான் – கிரண் ரிஜிஜூ

”அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ், அதன் ஆன்மாவையும், முகப்புரையையும் மாற்றியது,” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

லோக்சபாவில் அரசியலமைப்பு சட்ட விவாதத்தில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பு மீது நீங்கள் தான் தாக்குதல் நடத்தினீர்கள். அதன் முகப்புரையையும், ஆன்மாவையும் மாற்றினீர்கள்.

பாகிஸ்தானின் நிலை என்ன எனபதும், வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆப்கனில் சீக்கியர்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திபெத், மியான்மர், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறை எழும்போது, அவர்கள் அடைக்கலம் தேடி வரும் முதல் நாடு இந்தியா

அப்படி இருக்கையில் நீங்கள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என எப்படி சொல்கிறீர்கள். சிறுபான்மை இன மக்களுக்கு இந்தியா சம ஓட்டு உரிமை வழங்கிய நிலையில், சிலர் அவர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை என சொல்கின்றனர். நமது வார்த்தைகளும், செயல்களும், உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அமைந்து விடக்கூடாது.

சிறுபான்மையினருக்கு இந்தியா உரிமை வழங்கியதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கையையும் எடுத்து உள்ளது. அவர்களை பாதுகாக்க முந்தைய அரசுகளும் நடவடிக்கை எடுத்து உள்ளன. இதில் காங்கிரசின் பங்கை குறைத்து மதிப்பிடவில்லை.

அம்பேத்கரைப் பற்றி காங்கிரசார் அதிகம் பேசுகின்றனர். ஆனால், அவருக்கு உங்களது ஆட்சி காலத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. 1956க்கு பிறகு முன்னாள் பிரதமர் நேருவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. இந்திரா தனக்கு தானே பாரத ரத்னா விருதை கொடுத்தார். காங்கிரசை தோற்கடித்து பா.ஜ., ஆதரவுடன் ஆட்சி அமைத்த வி.பி.சிங், பிரதமர் ஆக பதவியேற்ற பிறகு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த விருதை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்காதது ஏன் என அக்கட்சியினர் விளக்க வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...