அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – கிரண் ரிஜிஜூ

”தன் பாவங்களுக்காக, அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருபோதும் மரியாதை அளித்தது இல்லை,” என, பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.

நம் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

நம் நாட்டில் அனைவருக்கும் சமமான ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும், சிறுபான்மையினருக்கு உரிமை இல்லை என, ஒருசிலர் கூறுகின்றனர். நம் நாட்டில் சிறுபான்மையினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை.

சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாக்., – ஆப்கானிஸ்தான் – வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே.

நம் நாடு மிகவும் பாதுகாப்பானது என்பதால் தான், அவர்கள் நம் நாட்டில் தஞ்சம் அடைகின்றனர். அனைவருக்கும் ஏற்ற நாடாக நம் நாடு விளங்குகிறது. நிறைய பாவங்களை காங்., செய்துள்ளது. இதற்காக அக்கட்சி அம்பேத்கரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 1952 லோக்சபா தேர்தலில், காங்., வெளிப்படையாக அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது.

பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த அக்கட்சி, அவருக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்க முன்வரவில்லை. பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன், அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளில் பட்டியல் ஜாதியினர் பற்றி நேரு ஒரு முறை கூட பேசவில்லை என, அம்பேத்கரே கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...