நேரு மாடல் அரசு தோல்வியடைந்தது விட்டது சரி செய்ய முயற்சிக்கிறோம் – ஜெய்சங்கர்

”நேரு வளர்ச்சி மாடல் என்பது தற்போதைய காலகட்டத்துக்கு தோல்வியடைந்து விட்டது. அதில் இருந்து விடுபட சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

நிடி ஆயோக் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா எழுதியுள்ள, ‘நேருவின் வளர்ச்சி மாடல்’ என்ற புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது.

இதில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

கடந்த 1947ல் அமெரிக்க நிபுணர் ஜான் பாஸ்டர் டல்லஸ், இந்தியா குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ‘இந்தியாவில் இடைக்கால ஹிந்து அரசு வாயிலாக, கம்யூனிச கொள்கையை புகுத்த முயற்சி நடக்கிறது’ என, அவர் கூறியிருந்தார். அப்போதிருந்த அரசை ஹிந்து அரசு என்று அவர் கூறியதை ஏற்கவில்லை. ஆனால், அவர் கூறிய கருத்து சரியா என்ற கேள்வி இருந்தது. அதற்கு இந்த புத்தகத்தில் விடை கிடைத்து உள்ளது.

அந்த கால கட்டத்தில் இருந்த தங்களுடைய பொருளாதார கொள்கைகள் தற்போதைய நடைமுறைக்கு சரியாக வராது என்று, ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளே, தங்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொண்டுஉள்ளன.

ஆனால், நம் நாட்டில் மட்டும் அப்போதிருந்த கொள்கைகளில் இருந்து விடுபட முயற்சிகளே மேற்கொள்ளவில்லை. நேருவின் வளர்ச்சி கொள்கைகள், நம் வெளியுறவு கொள்கை வரை விரிந்திருந்தது. இதைத் தவிர, அரசியல், நிர்வாகம், திட்ட கமிஷன், நீதித்துறை, ஊடகம், ஏன் கல்வி வரை அவை ஊடுருவியிருந்தன.

நேருவின் கொள்கைகள் தோல்வியடைந்தவை. கடந்த, 33 ஆண்டுகளில் அவரது கொள்கைகள் எடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், பெரிய அளவில் சீர்திருத்த முயற்சிகள் நடக்கவில்லை.

நேருவின் கொள்கைகள் தோல்வியடைந்தவை என்பதை உணர்ந்து தான், 2-014ல், அதை சீர்செய்யும் முயற்சிகள் துவங்கின. இதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வெளியுறவு கொள்கையிலும், நம் நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...