ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் சொகுசு கார் புகுந்ததில், ஐந்து பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர். காரை தாறுமாறாக ஓட்டிய சவுதி அரேபியா டாக்டர் கைது செய்யப்பட்டார்; இதில் பயங்கரவாதிகளின் பின்னணி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இந்தியர்கள் ஏழு பேரும் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |