இளைஞர்களின் திறமைக்கு வழிவகுப்பதே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் -மோடி

“நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது மிகவும் அவசியமானது. அதற்கான பொறுப்பு நாட்டின் கல்வி முறைக்கு உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளில் பணியாற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணையை, பிரதமர் மோடி நேற்று வழங்கினார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது அவசியம். அதற்கான பொறுப்பு நம் கல்வி முறைக்கு உள்ளது. எனவே தான் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு நவீன கல்வி முறையின் அவசியத்தை தேசம் பல ஆண்டு களாக உணர்ந்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையின் வாயிலாக நம் தேசம் அந்த திசை நோக்கி நகர துவங்கியுள்ளது. முன்னர், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, கல்வி முறை பெரும்பாலும் மாணவர்களுக்கு சுமையாக இருந்தது. ஆனால் இப்போது அது புதிய வாய்ப்புகளையும், விருப்பங்களையும் வழங்குகிறது.
கிராமப்புறங்களில் இருந்து வரும் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூக மாணவர்களுக்கு கல்வி கற்பதில் மொழி மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது. தற்போது, தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுவதுடன், அதிலேயே தேர்வு எழுதவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிக்கான தேர்வுகளை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, 13 மொழிகளில் எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது. எல்லைப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை கிடைப்பதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், 50,000 இளைஞர்களுக்கு மத்திய ஆயுதப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின், ‘கோபர்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், பசும் சாண உயிர் வாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைக்கு பணி நியமன ஆணை பெற்றவர்களில், பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். நீங்கள் பெற்றுள்ள வெற்றி பல பெண்களுக்கு ஊக்கமாக அமையும். பல பள்ளிகளில், பெண்களுக்கு தனி கழிப்பறை இல்லாததால், பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். துாய்மை இந்தியா திட்டத்தால் அந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அரசு திட்டங்களில் நேரடியாக பலன் அடைவதற்காக, 30 கோடி பெண்களுக்கு, ‘ஜன் தன்’ கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ‘முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கு உத்தரவாதமின்றி கடன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...