தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னர் ரவி பிரதமர் மோடியுடன் ஆலோசனை

டில்லியில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 4 நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ளார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது தனிப்பட்ட பயணம் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று (டிச.,24) டில்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை, கவர்னர் ரவி சந்தித்து பேசி உள்ளார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து, பிரதமர் மோடியுடன் கவர்னர் ரவி ஆலோசனை நடத்தியதாக, டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஜனவரி 6ம் தேதி, கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளதால் அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...