44,605 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்திற்கு மோடி அடிக்கல்

​முன்​னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்​தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல்​தலை, நாணயத்தை வெளி​யிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள கென்​-பெட்வா நதிகள் இணைப்பு திட்​டத்​துக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 100-வது பிறந்​தநாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி, டெல்​லி​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்​சர்கள் உள்ளிட்​டோர் மலர் தூவி மரியாதை செலுத்​தினர்.

இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் வாஜ்பாய் நினைவு அஞ்சல்​தலை, நாணயத்தை வெளி​யிட்​டார். பின்னர், கென் – பெட்வா ஆறுகள் இணைப்பு திட்​டத்​துக்கு அடிக்கல் நாட்​டி​னார். மாநில முதல்வர் மோகன்யாதவ், மத்திய நீர்​வளத் துறை அமைச்சர் சி.ஆர்​.பாட்​டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள இந்த திட்​டத்​தின்​கீழ் தவுதான் அணை கட்டப்​படும். அங்கிருந்து இரு ஆறுகளுக்கு இடையே 221 கி.மீ. தூரத்​துக்கு இணைப்பு ஏற்படுத்​தப்​படும். இதன்​மூலம் மத்திய பிரதேசத்​தின் 10 மாவட்​டங்களை சேர்ந்த 44 லட்சம் பேருக்​கும், உத்தர பிரதேசத்​தின் 21 லட்சம் பேருக்​கும் குடிநீர் விநி​யோகம் செய்​யப்​படும்.

இதுதவிர, சுமார் 2 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 8.11 ஹெக்​டேர் நிலம் நீர்ப்​பாசன வசதியை பெறும். இதன்​மூலம் 7.18 லட்சம் விவசாய குடும்​பங்கள் பயனடை​யும். மேலும் நீர்​மின்​சக்தி திட்டம் மூலம் 103 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும், சூரிய மின்​சக்தி திட்டம் மூலம் 27 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும் உற்பத்தி செய்ய இந்த திட்டம் வகை செய்​யும். இதுதவிர, மத்திய பிரதேசத்​தின் கந்த்வா நகரில் நிறு​வப்​பட்​டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்​கும் சூரிய மின்​சக்தி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்​தார்.

வெள்ளம் மற்றும் வறட்சிக்கு தீர்வாக, நாட்​டில் உள்ள நதிகளை இணைக்​கும் திட்​டத்தை வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்​மொழிந்​தது. இதன் முதல் திட்​டமாக கென் ​- பெட்வா ஆறுகள் இணைப்பு இருக்​கும் என கருதப்​படு​கிறது. 1,153 கிராம சேவா சதன்களை ரூ.437 கோடி​யில் கட்டு​வதற்கான திட்​டத்​துக்​கும் பிரதமர் மோடி பூமி பூஜை செய்​தார்.

இதைத் தொடர்ந்து நடந்த பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: சுதந்​திரத்​துக்கு பிறகு, பாபாசாகேப் அம்பேத்​கரின் தொலைநோக்கு பார்வை இந்தியா​வின் நீர்​வளம் மற்றும் நீர் சேமிப்பு முயற்சி​களுக்கு வழிகாட்​டியது. அவரது முயற்​சியால் ​தான் இன்றும்கூட மத்திய நீர்வள ஆணையம் இயங்​கு​கிறது.

ஆனால், காங்​கிரஸ் கட்சி அவருக்கு உரிய அங்கீ​காரம் தர​வில்லை. நாட்டை ஆட்சி செய்வது தங்கள் பிறப்பு​ரிமை என்று காங்​கிரஸ் நம்பியது, ஆனால், நல்லாட்சி வழங்க தவறி​விட்​டது. மக்களுக்கு நன்மை செய்யாத அறிவிப்புகளை வெளி​யிடு​வ​தில் அவர்கள் கைதேர்ந்​தவர்​கள். காங்​கிரஸ் ஆட்சி​யின்​போது அடிக்கல் நாட்​டப்​பட்ட பல திட்​டங்கள் முடிவடைய 35 முதல் 40 ஆண்டுகள் வரை தாமதம் ஆனது.

மத்திய அரசு தற்போது செயல்​படுத்தி வரும் பிரதமரின் விவசா​யிகள் நிதி​யுதவி திட்​டம், மத்திய பிரதேச அரசு செயல்​படுத்​தும் மகளிர் நிதி​யுதவி திட்டம் ஆகிய​வற்​றால் விவசா​யிகளும், பெண்​களும் பயனடைந்து வருகின்​றனர். வாஜ்பா​யின் தொலைநோக்கு பார்வை என்னை போன்ற ஆர்வலர்கள் உட்பட பல தலைமுறை​யினருக்கு உத்வேகம் அளித்​துள்ளது. நாட்​டின் முன்னேற்​றத்​தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினை​வு​கூரப்​படும். மக்​கள் நலனில் கவனம் செலுத்து​வ​தி​லும், அரசின் ​திட்​டங்​கள் மக்​களுக்கு பயனளிப்​பதை உறுதி செய்​வ​தி​லும்​தான் பாஜக​வின் வெற்​றி உள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...