டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். பிரதமர் மோடி உறுதி

‘டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, தாமரை மலரும்’ என்று நம்பிக்கை வையுங்கள் என டில்லியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் 12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று (ஜன.,05) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அவர், மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கும், டில்லிக்கும் மிக முக்கியமானவை; இந்த ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற பங்களிப்பாளராக இருப்போம். டில்லி சட்டசபை தேர்தலில் தாமரை மலரும் என்று நம்பிக்கை வையுங்கள்.

டில்லியை வளர்ந்த இந்தியாவின், தலைநகராக நாம் உருவாக்க வேண்டும். இது எங்கள் கனவு. எனவே, டில்லியின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் டில்லி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பா.ஜ., கடுமையாக உழைத்தது.

உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும். டில்லிக்கு ரூ.75,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தின் மகத்தான வடிவத்தை வெளிப்படுத்தும் நகரமாக டில்லி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உ.பி. சாஹிபாபாத் – டில்லி நியூ அசோக் நகர் இடையே ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் நமோ பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ரயிலில் பயணித்து, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.