புததம் தான் எதிர்காலம் யுத்தம் அல்ல- பிரதமர் மோடி

“இந்தியா சொல்வதை கேட்க உலகமே தயாராக இருக்கிறது. நம் நாட்டின் பாரம்பரியம் காரணமாக, ‘யுத்தம் எதிர்காலம் அல்ல; புத்தம் தான் எதிர்காலம்’ என்பதை சர்வதேச சமூகத்திடம் நம்மால் வலியுறுத்த முடிகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுவாழ் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக, ‘பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு’ ஆண்டுதோறும் நடக்கிறது. இதன், 18வது மாநாடு ஒடிசாவின் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் துவங்கி இன்று வரை நடக்கிறது.

இந்த மூன்று நாள் மாநாட்டில், 50 நாடுகளில் இருந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர். நேற்று நடந்த இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

புலம்பெயர்ந்தோரை, அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்தியாவின் துாதர்களாகவே எப்போதும் கருதுகிறேன். நமக்கு பன்முகத்தன்மையை கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், நம் வாழ்க்கையே பன்முகத்தன்மையில் தான் இயங்குகிறது. அதனால்தான், இந்தி யர்கள் எங்கு சென்றாலும், அந்த குறிப்பிட்ட நாட்டின், சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றனர். அந்த நாட்டின் விதிகள் மற்றும் மரபுகளை நாம் மதிக்கிறோம்.

அந்த நாட்டிற்கும், அதன் சமூகத்திற்கும் நேர்மையாக சேவை செய்கிறோம். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கிறோம். அதே நேரத்தில் நம் இதயம், இந்தியாவை நினைத்தே துடித்துக் கொண்டிருக்கும்.

புலம்பெயர்ந்த இந்தி யர்களால், நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் தலை நிமிர்ந்து செல்கிறேன். உலகம் முழுதும், உங்களிடம் இருந்து நான் பெற்ற அன்பு, பாசம், கவுரவத்தை நான் மறக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில், உலகம் முழுதும் பல்வேறு தலைவர்களை நான் சந்தித்துள்ளேன். அங்கு வசிக்கும் இந்தியர்களை உலகத் தலைவர்கள் பாராட்டுகின்றனர். அவர்களின் சமூகத்திற்கு நீங்கள் சேர்க்கும் சமூக மதிப்பீடுகளே இதற்குக் காரணம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...