போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவோம் : அமித்ஷா

”இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள், கிரிப்டோ கரன்சி, ஆன்லைவர்த்தகம், ட்ரோன்கள் வாயிலான குற்றங்கள் நமக்கு பெரிய சவாலாக உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

”போதைப் பொருட்கள் கடத்தலை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.

போதைப் பொருட்கள் கடத்தலும், தேசிய பாதுகாப்பும் என்பது தொடர்பான பிராந்திய அளவிலான கருத்தரங்கம் டில்லியில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள், கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம், ஆன்லைன் வர்த்தகம், ட்ரோன்கள் வாயிலான குற்றங்கள் நமக்கு பெரும் சவால்களாக உள்ளன.

சிறப்பான பலன்கள்

இவற்றை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுபோல், மற்றொரு முக்கிய சவாலாக போதைப் பொருட்கள் கடத்தல் அமைந்துள்ளது.

போதைப் பொருட்கள் கடத்தலுடன் அது, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இந்த பிரச்னையை ஒழிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம் என, பல மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்துள்ளன. இந்த போதைப் பொருள் கடத்தல் இணைப்புகளை துண்டிப்போம்.

இதன் வாயிலாக பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுத்து நிறுத்துவோம். ஒரு கிலோ போதைப் பொருட்கள் கூட, நம் நாட்டின் வழியாக கடத்த முடியாதவாறு தடுத்து நிறுத்துவோம்.

இது போன்ற பிரச்னைகளுக்கு, தொழில்நுட்ப உதவிகளுடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம்.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்.

ஏழு மடங்கு அதிகம்

கடந்த ஆண்டில் மட்டும், 16,914 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதே அரசின் முன்னுரிமை.

கடந்த 2004 – 2014 கால கட்டத்தில், 3.63 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில், 2014 – 2024 கால கட்டத்தில், 24 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது, ஏழு மடங்கு அதிகம்.

அதுபோல, 2004 – 2014 கால கட்டத்தில் 8,150 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

இதுவே, 2014 – 2024ல், 54,851 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...