திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, ‘தி.மு.க., நேர்மையான போர் வீரன் அல்ல’ என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், தமிழிசை கூறியதாவது: கவர்னரும், முதல்வரும், தங்களது கருத்து வேறுப்பாட்டை விட்டு, அமர்ந்து ஒற்றுமையாக, தோழமையுடன் பேசி துணை வேந்தர்கள் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நான் நினைத்து கொள்கிறேன்.

சீமானின் ஈ.வெ.ரா பற்றிய கருத்துக்கள் எல்லாம் பா.ஜ.,வின் கருத்துக்கள். காலம் காலமாக பா.ஜ., சொல்லி வந்த கருத்து தான். ஆகையால் எங்களது கருத்தியலை சீமான் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

ஆகையால் இனிமேல் ஈ.வெ.ரா.,வை பற்றிய பிம்பம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பிக்கும் எனது கருத்து. பா.ஜ.,வின் பி டீம் எல்லாம் சீமான் கிடையாது. எங்களது ‘தீம்’. எங்களது ‘தீம்’ ஐ அவர் பேசுகிறார். அவ்வளவு தான். அனைவருக்கும் தனி தனி கொள்கை இருக்கிறது.

ஆரோக்கியமான கருத்தை அவர் பதிவு செய்கிறார். உண்மை என்றாவது வெளிவரும். அண்ணாதுரை வளர்த்த தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ். ஈ.வெ.ரா., குறித்து சீமான் கேட்டு இருப்பது நல்ல கேள்வி. இவ்வாறு தமிழிசை கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, தமிழிசை அளித்த பதில்: பா.ஜ.,வின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி தி.மு.க.வுக்கு இல்லை. போர்க்களத்தில் தி.மு.க., நேர்மையான போர்வீரன் அல்ல. முதுகில் குத்துபவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...