முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை

”முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து பேசி மாநில பிரச்னைளை விவாதித்து முடிவெடுக்க வேண்டும்,” என, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிருபர்களுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது பொங்கல் பரிசு கொடுக்க முன்வராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.,வை, அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளன.

கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து, மாநில பிரச்னைகளை பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

தெலுங்கானாவில், சந்திரசேகரராவ் முதல்வராக இருந்த போது, பிரதமர் மோடி வந்தால் அவரை வரவேற்க வரமாட்டார். முதல்வர் ஸ்டாலினை போலவே, மத்திய அரசின் திட்டங்களையும், சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார். அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார்.

மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்திருக்கிறார்.

இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல, தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., டிபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி, நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பா.ஜ., போட்டியை ஏற்றுக்,கொள்ளும் தகுதி, தி.மு.க.,வுக்கு இல்லை.

தி.மு.க.,வில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. முதுகில் குத்துபவர்களாக உள்ளனர். ஈ.வெ.ரா., சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பா.ஜ., தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்துள்ளனர். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...