மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் அனுமதி அளித்து உள்ளார்.

*ஆந்திராவில் ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி நிலையத்தில் 3வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

*ஸ்ரீஹரிக்கோட்டாவில், இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்ளுக்கான உள்கட்டமைப்பு இருப்பதையும், அங்குள்ள இரண்டாவது ஏவுதளத்திற்கு உதவும் வகையிலும் 3வது ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

ஏவுதளம் மற்றும் அதன் தொடர்புடைய வசதிகள் அமைக்கப்படுவதற்காக 3984.86 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவு பெறும்.

*இதன் மூலம், இஸ்ரோ அதிகளவில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கும், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லவம், விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

சம்பளக்கமிஷன் அமைக்க வேண்டும் என்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் சம்பளக்கமிஷன் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய சம்பளக்கமிஷன் பரிந்துரை அடிப்படையில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக சம்பள கமிஷன் அமைப்பது வழக்கம். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு அமைக்கப்படும் இந்தக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளம், இதர சலுகைகள் உயர்வு செய்யப்படும். கடைசியாக அமைக்கப்பட்ட 7 வது சம்பள கமிஷன், மன்மோகன் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி ஆட்சியின் போது 2014 ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 ஜன., மாதம் அமல் செய்யப்பட்டன.

அகில இந்திய ரயில்வேமேன் பெடரேசன் சங்க பொதுச் செயலாளர் ஷிவ்கோபால் மிஸ்ரா கூறுகையில், கடைசியாக அமைக்கப்பட்ட சம்பள கமிஷன் பரிந்துரை 2016 ஜன., 1ம் தேதி அமலுக்கு வந்தது. எனவே, புதிய சம்பள கமிஷன் பரிந்துரை 2026 ல் அமல் செய்யப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகும், சம்பளம் உயர்த்த முடியாது என்று எந்த அரசும் மறுக்க வாய்ப்பில்லை என நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...