திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் உள்ளிட்ட எதிர்காலத்துக்கு தேவையான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.

பிரிட்டனை சேர்ந்த கியூஎஸ்(QS) என்ற உயர்கல்வி குறித்த அமைப்பு ஆண்டுதோறும், பல்கலைகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எதிர்கால வேலை சந்தைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு, நாடுகள் எவ்வாறு தங்களை தயார்படுத்தி வருகின்றன என்பது குறித்த பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி எதிர்கால திறன் போட்டியாளர் பிரிவில் இந்தியா 25வது இடத்தில் உள்ளது.அதேநேரத்தில், எதிர்கால வேலைக்கான திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இதற்கான ஆய்வு 190 நாடுகளில் 28 கோடி பணியிடங்களிலும், 5 ஆயிரம் பல்கலைகளிலும், 50 லட்சம் பணியாளர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த பத்து ஆண்டுகளில், இந்திய இளைஞர்களை சுயசார்புடையவர்களாக, வளங்களை உருவாக்க உதவும் திறன்களை கொண்டு உள்ளவர்களாக, மத்திய அரசு வலிமைப்படுத்தி வருகிறது. கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைக்கான மையமாக இந்தியாவை மாற்ற தொழில்நுட்பத்தின் சக்தியை பயன்படுத்தி உள்ளோம். இளைஞர் முன்னேற்றத்திற்கான பாதையில் இந்தியா முன்னேறும் நேரத்தில் இந்த அறிக்கை முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...