ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

”நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் அந்த சந்தேகம் தவறு என்பதை நம் ஜனநாயகம் நிரூபித்து வருகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கீ பாத்’ எனப்படும் மனதில் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே கலந்துரையாடுகிறார்.

அதன்படி, இந்த ஆண்டின் முதல் ரேடியோ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில், அவர் கூறியுள்ளதாவது:

வழக்கமாக கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, இப்போது ஒலிபரப்பாவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான நாள்.

நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். அதனால், இந்த நிகழ்ச்சி முன்னதாகவே ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தினம் நமக்கெல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசின் 75வது ஆண்டை நாம் கொண்டாட உள்ளோம்.

நம் நாடு குடியரசு அந்தஸ்து பெற்றது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கப்பட்டதன் 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம்.

இந்த நேரத்தில், பார்லிமென்டின் நிர்ணய சபையில் பணியாற்றிய அம்பேத்கர், ஜனாதிபதியாக பணியாற்றிய ராஜேந்திர பிரசாத், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் பங்களிப்பை நினைத்து பார்க்க வேண்டும்.

குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான, ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாகும். இந்த நாளில்தான் நம் தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டது.

தேர்தல் நடைமுறைகளில் தொடர்ந்து மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்து வரும் தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுகள்.

நம் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இந்த சந்தேகங்கள் அனைத்தும் தவறு என்பதை நம் ஜனநாயகமும், தேர்தல் கமிஷனும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. ஏனென்றால், ஜனநாயகத்தின் தாயகம் நம் நாடு தான். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.