‘யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் பெருமையை பரப்பும் பிரதமரின் பணியில் மற்றொரு மைல்கல்’ என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையம் கட்டப்பட்டது.
இதற்கு, ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என மறு பெயரிட்டிருப்பது, உலகம் முழுதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான, தமிழின் பெருமையை பரப்புவதற்கான, பிரதமரின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல் கல்லாகும்.
இது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |